Princiya Dixci / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனி ஒரு மனிதனைச் சமூகம் ஒதுக்கி வைப்பதென்பது, ஒரு பொல்லாத தண்டனைதான். சாதியின் பெயரால் அல்லது பணவசதியில்லை என்ற காரணத்தால், அவர்களை உதாசீனம் செய்வது, தெய்வத்துக்கே அடுக்காது.
ஆனால், பயங்கரமான கொடுமைக்கார மகா பாவியை ஒரு சமூகம் ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வைப்பது நியாயமான செயல். ஆனால், இத்தகைய மனிதர்களைச் சட்டம் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதே மிகவும் பாரதூரமான செயலாகும்.
இன்று கண் எதிரே கொலை, கொள்ளை என்ற கொடும்பாவங்களைச் செய்பவர்களை, கதாநாயர்களாக ஏற்கும் மனோபாவம், மக்களில் பலருக்கும் வந்துவிட்டது போல் காரியங்கள் நடக்கின்றன. இதன் எதிர்வினையைக் காலம் காட்டிவிடும்.
வாழ்வியல் தரிசனம் 28/09/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .