2026 பெப்ரவரி 09, திங்கட்கிழமை

சிலர் எதிர்கால நலனை இழக்கும் வகையில் நடந்து கொள்கின்றார்கள்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எளிதில் கிடைக்கும் அதிஸ்டத்தின் பெறுமதி தெரியாமலே சிலர் தங்கள் எதிர்கால நலனை இழக்கும் வகையில் நடந்து கொள்கின்றார்கள். 

எதனையும் மெய்வருந்தி உழைத்தால் தான் முன்னேற்றத்துடன் நல்ல அனுபவங்களும் கிடைக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. 

ஆனால், முறைகேடுகள் மூலம் கிடைக்காமல், அனுகூலங்களை உடன் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்துதலே புத்திசாலித்தனமாகும். 

தெளிந்த மனோநிலையுடன் துணிச்சலுடன் அறிவு, அனுபவம் இணைந்தால் எல்லாக் காரியங்களுமே சத்தமின்றிக் கைக்குள் வந்துசேரும்.

சலனம், சஞ்சலத்துடன் எந்த காரியத்துக்குள்ளும் நுளைவது பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். காரிய சித்திக்குக் கரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். 

 

வாழ்வியல் தரிசனம் 10/10/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X