2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

கருவறை கொலையில் இருந்து தப்பிய ரொனால்டோ

A.P.Mathan   / 2014 ஜூலை 20 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத்தின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற 2013ஆம் ஆண்டிற்கான விருதைப் பெற்றுள்ள உலகப் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தான் கருவறையில் அளிக்க முயற்சி செய்ததாக ரொனால்டோவின் தாயார் தெரிவித்துள்ளார். 
 
தனது வாழ்க்கை தொடர்பான சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்டுள்ள அவர், அந்த புத்தகத்திலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 
 
ரொனால்டோ பிறப்பதை தான் விரும்பவில்லை எனவும், கருவறையில் சிசுவை அளிப்பதற்கு மருத்துவர்களும் முடியாது என மறுத்துவிட, பியர் பானத்தை அருந்தி ஓடி திரிந்ததாகவும் அது சாத்தியமாகவில்லை எனவும் வேறு வழியில்லாமல் குழந்தையை பெற்றெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.  
 
கிறிஸ்டியானோ ரொனால்டோ இற்கு இந்த விடயம் தெரியும் என கூறியுள்ள அவரின் தாயார் டொலரேஷ் அவிரோ, குடும்பத்திற்காக உழைப்பவன் நானே எனவும் அவர் கூறுவார் எனவும் தன் புத்தகத்தில் அவர் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X