2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அஜீத்தின் வீட்டுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய நடிகர் அஜீத் குமாரின் திருவான்மியூர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த மர்ம நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அஜீத்தின் வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கௌதம்மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் அஜீத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு 108 என்ற அம்பியூலன்ஸ் சேவை இலக்கத்துடன் தொடர்புகொண்டுள்ள மர்ம நபர் ஒருவர், திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அது வெடிக்கும் என்று கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்கன், பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் அஜீத் வீட்டுக்கு விரைந்த பொலிஸார், அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். ஒவ்வொரு அறையாக சென்று வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனையிட்டனர். இறுதியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

எனினும், அஜீத் வீட்டிற்கு பாதுகாப்பு போடபட்டு உள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பில் பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அச்சந்தேகநபை கைது செய்வதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • palraj adidravidar Tuesday, 02 September 2014 09:15 AM

    Thala next level oru mgr oru rajini ore thala ajith Kumar

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .