2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

குட்டைப் பாவடை அணிய சுவாசிலாந்து பெண்களுக்கு தடை

Kogilavani   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவாசிலாந்தில் பெண்கள், குட்டைப் பாவாடை மற்றும் உடல் தெரியும் வகையிலான மேலாடைகளை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்ட ஆடைகளை அணிபவர்கள் 6 மாத சிறைதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் இவ்வாறான குட்டைப் பாவாடைகள் மற்றும் உடல் தெரியும் வகையிலான மேலாடைகளை அணிவதானது பாலியல் வன்முறையை தூண்டும் வகையில் அமைவதால் இவ்வாறான ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் பெண் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

'உடல் அங்கங்கள் தெரியும் வகையில் பெண்கள் ஆடை அணிவதற்கு தடைவிதிக்கப்படுகிறது' பழமைவாத சட்டமானது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக சுவாஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவாசிலாந்தில் மூன்றில் இரண்டு வீதமான பதின்ம வயது பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்டுவதாக ஊடக அறிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சமத்துவ உரிமைகள் மற்றும் பாதுகாப்பு கோரி கடந்த மாதம் இந்நாட்டு பெண்கள் சுவாசிலாந்தின் இரண்டாவது நகரமான மன்சாரி நகரில் ஊர்வலம் சென்றனர்.

இவ்வாறான போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுவாசி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

'தடைவிதிக்கப்பட்ட ஆடைகளை அணிபவர்கள் கைது செய்யப்படுவர்' என சுவாசி பொலிஸ் பெண் பேச்சாளர் வென்டி ஹெல்டா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெண்கள் இவ்வாறான ஆடைகளை அணிவதால் எதிரிகளுக்கு மிகவும் சுலபமாக அமைந்துவிடுகின்றது. பெண்கள இந்த  பாதிப்புகளை தொடர்ந்தும் எதிர்கொள்வதை எம்மால் ஊக்குவிக்க முடியாது. மக்கள் இவ்வாறான விடயங்களை கவனித்தில்கொள்ள வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் பாரம்பரிய விழாக்களின்போது நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் குட்டை பாவாடை அணிவதற்கு அனுமதி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • ikmsm Wednesday, 26 December 2012 06:54 AM

    இந்த அருவருக்கத்தக்கதை பார்க்கப்போய் மனிதனுடைய இருக்கிற அறிவும் மங்கிப்போனதுதான் மிச்சம் என்று இப்பதான் இவர்களுக்க புறிந்திருக்கிறது. அனால் இஸ்லாம் மர்க்கம் இதை 1400 ஆண்டுகலுக்கு முன்பே சொல்லியாச்சப்பா!. ஆனால் அதை இஸ்லாதில் என்னமோ பெண் கொடுமை வன்கொடுமை என்று தமக்கு சாதகமாக பிரகணப்படுத்திக்கொண்டவர்கள் இப்போது அந்த மார்க்கத்தின் சட்டங்களை மறைமுகமாக பின்பற்றுகின்ரனர். இதுதான் உண்மை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .