2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உலகின் உயரமான பெண்ணின் முதல் விமானப் பயணம்

Editorial   / 2022 நவம்பர் 08 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் உயரமான பெண்ணாக அறியப்படும் ருமேசா கெல்கி முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.

உயரமான மனிதர்களுக்கு அன்றாட வாழ்வில் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட கடினமானதாக மாறலாம். பேருந்து, ரயில், விமானம் என அவர்களது பயணங்கள் சிரமத்துக்குள்ளானதாகவே அமைவதை நாமும் பார்த்திருப்போம். அதே சிரமத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வந்தவர்தான் துருக்கியின் ருமேசா கெல்கி. உலகின் உயரமான பெண்ணாக அறியப்படுகிறார் துருக்கியின் ருமேசா கெல்கி .இவரது உயரம் 7 அடி 7 அங்குலம்.

தனது உயரம் காரணமாக ருமேசா வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், துருக்கியை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று ருமேசா கெல்கிக்காக தங்களது விமானத்தில் மாற்றம் செய்து ஆறு இருக்கைகள் இருந்த இடத்தில் படுக்கை ஒன்றை அமைத்து ருமேசா கெல்கியை விமானத்தில் பயணம் செய்ய வைத்திருக்கிறது. இதன் மூலம், 13 நேர பயணத்திற்குப் பிறகு துருக்கியிலிருந்து அமெரிக்காவுக்கு ருமேசா கெல்கி சென்றடைந்திருக்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X