2024 மே 20, திங்கட்கிழமை

குழந்தையே பிறக்காத நாடு எது தெரியுமா?

Mayu   / 2024 மே 01 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் எத்தனையோ நாடுகள் பல்வேறு விதமான மர்மமான விஷயங்களை கொண்டுள்ளன. அப்படி ஒரு வித்தியாசமான விஷயத்தை தனக்குள் வைத்திருக்கும் நாடுதான் இது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அனைத்து பெரிய மத தலைவர்களும் இங்கு வாழ்கின்றனர். 

போப் இங்கே ஆட்சி செய்கிறார், ஆனால் இந்த நாட்டைப் பற்றிய சில விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை. இந்த நாடு 1929 பிப்ரவரி 11 அன்று உருவாக்கப்பட்டதுஇ 95 வருடங்களை கடந்துவிட்டாலும் இங்கு இதுவரை ஒரு குழந்தைகூட பிறக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். இந்த நாட்டின் பெயர் வத்திக்கான் நகரம்.

 உலகின் மிகச் சிறிய நாடும் இதுதான். உண்மையில், உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வேர்கள் இங்கிருந்துதான் உள்ளன என்று கருதப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபை மற்றும் அதன் பாதிரியார்கள் மற்றும் முக்கிய மதத் தலைவர்கள் இங்கிருந்து கட்டுப்படுத்தப்படுகிறார்கள். முதலில் இந்த நாடு உருவான பிறகு இங்கு ஏன் வைத்தியசாலைகள் இல்லை என்று பலமுறை நடந்த விவாதத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பலமுறை வைத்தியசாலைகள் கோரப்பட்டும் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டது. இங்கே, யாராவது தீவிர நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தாலோ, அவர் ரோமில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகிறார் அல்லது அந்தந்த சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.

வத்திக்கான் நகரில் வைத்தியசாலைதிறக்கப்படுவதில்லை என்ற முடிவு அதன் சிறிய அளவு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தரமான மருத்துவ வசதிகள் அருகாமையில் இருப்பதால் இருக்கலாம் என கூறப்படுகிறது.

வத்திக்கான்  நகரத்தின் பரப்பளவு 118 ஏக்கர் மட்டுமே. அனைத்து நோயாளிகளும் ரோமில் உள்ள கிளினிக்குகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டும். 

இங்கு பிரசவ அறை இல்லாததால் இங்கு யாரும் பிரசவம் செய்ய முடியாது. அதனால் வெளியே சென்றுவிடுகின்றனர்.இயற்கையான குழந்தைப் பிரசவம் இங்கு நடக்கவில்லை அல்லது அதைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இங்குள்ள பெண் எப்போது கர்ப்பமாகி, பிரசவ நேரம் நெருங்குகிறதோஇ அப்போது இங்குள்ள விதிகளின்படி, குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவர் இங்கிருந்து செல்ல வேண்டும்.

வத்திக்கான் நகரில் யாருக்கும் நிரந்தர குடியுரிமை கிடைப்பதில்லை, இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பதவிக்காலம் வரை மட்டுமே இங்கு தங்குவார்கள், அதுவரை தற்காலிக குடியுரிமை பெறுவார்கள். இதன் காரணமாக, எதிர்காலத்தில் நிரந்தரக் குடியுரிமையைப் பெறக்கூடிய பிறப்பே இங்கு இல்லை.

வத்திக்கான் நகரம் 0.44 சதுர கி.மீ. பரப்பளவில் மட்டுமே பரவியுள்ளது. வாடிகன் நகரம் நிச்சயமாக ஒரு இறையாண்மை கொண்ட நாடு?ஆனால் அது இத்தாலிக்குள் ஒரு சிறிய பிரதேசமாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X