2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கசிப்புடன் சந்தேகநபர் கைது

R.Tharaniya   / 2025 ஜூன் 01 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பாய் - ஊரெழு பகுதியில் 40 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வாக்குமூலங்களுக்கு அமைவாக சுதுமலை பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.

மானிப்பாய் - சுதுமலை பிரதேசத்தில் நீண்ட நாட்களாக வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தி செய்து வந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த நபரை கைது செய்தனர். இதன்போது, 600 லீற்றர் கோடா, 60 லீற்றர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் கேஸ் சிலிண்டர் என்பன கோப்பாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றதால் சந்தேக நபர் சான்றுப் பொருட்களுடன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X