Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் கோப்பாய் பகுதியில் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள கத்தரி தோட்டம் ஒன்றில் கடந்த 07ஆம் திகதி இரவு பெரும் தொகையான கத்தரிக்காய்கள் திருடப்பட்டுள்ளன.
மறுநாள் தோட்ட உரிமையாளர் தோட்டத்திற்கு சென்ற வேளையில் கத்திரி செடியில் இருந்த கத்திரிக்காய்கள் திருடப்பட்டுள்ளமையை அவதானித்து , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிராகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் ,கத்தரிக்காய்களை திருடிய குற்றத்தில் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞன் ஞாயிற்றுக்கிழமை (17) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்.றொசாந்த்
5 minute ago
6 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
42 minute ago