Janu / 2023 மே 31 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறுசெல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றைய தினம் 30/05/2023 முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
வவுனியா வடக்கு அனந்தர்புளியங்குளம், சின்னப்பூவரசங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம், ஶ்ரீ நாக கண்ணகையம்மன் ஆலயங்களின் கட்டிட பணிக்காக ரூபா 100000/- நிதியும்,
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு, பிலக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கின்ற பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு கழிப்பறை திருத்த வேலைக்காக ரூபா 50,000 நிதியும், மின்சார இனைப்புக்காக ரூபா 30,000 நிதியும்,
கிளிநொச்சி - உமையாள்புரம் உமாமகேஸ்வரர் தேவஸ்தானத்திற்கு கட்டிட திருப்பணிக்காக 2ம் கட்டமாக ரூபா 50,000 நிதியும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இவ் செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தனது தொண்டர்கள் சகிதம் நேரடியாகச் சென்று வழங்கி வைத்ததுள்ளார்.
எஸ் தில்லைநாதன்








42 minute ago
47 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago
4 hours ago