2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

சீமானை ஆதரித்து யாழில் மாட்டு வண்டி ஊர்வலம்

Janu   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு அங்கமாக, மானிப்பாய் பகுதியில் மாட்டு வண்டி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் இணைந்து இந்த ஆதரவு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்த ஊர்வலத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் சின்னம் மற்றும் சீமானின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்த ஆதரவாளர்கள், சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளை மாட்டு வண்டிகளில் கட்டியிருந்தனர். அத்துடன், ஏரினைச் சுமந்தவாறு இந்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

மானிப்பாய் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலமானது, மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் வரை சென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .