R.Tharaniya / 2025 ஜூன் 01 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமராட்சி கிழக்கு கடலில், சட்டவிரோத சுருக்குவலை தொழில் காரணமாக, அதிகளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர்.
நாளாந்தம் சுருக்குவலை தொழிலுக்கு செல்லும் அதிகளவான படகுகள், 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகளவான மீன்களை பிடித்து வருவதனால் சிறு தொழிலாளர்கள் வருமானத்தை இழந்துள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டனர்.
சுருக்குவலை தொழிலில் அதிகளவான மீன்கள் கிடைப்பதனால் சிறு தொழிலாளர்கள் பிடிக்கும் மீன்களின் விலை சந்தைகளில் குறைந்துள்ளது.
இதனால் அதிகளவான மீனவர்களின் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை நிறுத்தியுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் சுருக்கு வலை த் தொழிலை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ் தில்லைநாதன்
41 minute ago
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago
6 hours ago
6 hours ago