R.Tharaniya / 2025 ஜூன் 08 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூலக நிறுவனமும் யாழ்ப்பாணம் பொது நூலகமும் இணைந்து டிஜிட்டல் மயமாக்கல் செயல்திட்டத்தை எதிர்காலத்தில் இணைந்து செயல்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல் சனிக்கிழமை( 07) அன்று நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
நூலக நிறுவனம் இதுவரை முன்னெடுத்துள்ள செயல்பாடுகள் மற்றும் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் அதில் பேசப்பட்டன. அத்துடன், டிஜிட்டல் மயமாக்கல் செயல்திட்டத்தை இணைந்து செயல்படுத்துவதன் ஊடாக கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆலோசனை குழு, மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர்காலத்தில் கலந்துரையாடி தொடர் நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எஸ் தில்லைநாதன்
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago