2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பலகோடி பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

Mayu   / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நேற்றைய தினம் (17) மேற்கொள்ளப்பட்ட விசேடதேடுதல் நடவடிக்கையின் போது சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதலை மேற்கொண்ட போது சுமார் சுமார் 68 கிலோவுக்கு மேற்பட்ட 30 பொதிகள் கொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன. இக் கேரள
கஞ்சா பொதிகள்  வீடு ஒன்றின்  சீலிங் பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதன்போது சந்தேகத்தின் பெயரில் வீட்டுரிமையாளரான பெண் ஒருவர் கைது
செய்யப்பட்டள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X