2025 ஜூலை 19, சனிக்கிழமை

யாழ்.தீவு பகுதிகளுக்கு பாதுகாப்பைஉறுதிப்படுத்த ​வேண்டும்

R.Tharaniya   / 2025 ஜூலை 13 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். குடாநாட்டில் தீவுபகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

அத்துடன்,கடல் போக்குவரத்து சேவை வழங்கும் படகுகளின் தரம் மற்றும் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன தொடர்பில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுமாறு பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு தெரிய படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

 நெடுந்தீவைச் சேர்ந்ததனியார் ஒருவருக்குச் சொந்தமான சுற்றுலாப்பயணிகளை ஏற்றும் சிறிய ரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் பயணிகள் 12 பேர் 02 பணியாளர்கள் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவதானித்த அவ்வழியே சென்ற  நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகு பணியாளர்கள்  விரைந்து செயற்பட்டு சேதமடைந்த கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றியுள்ளனர்.

கடற்படையினரும் முழுவீச்சுடன் செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.கடல் பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன. அவை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X