Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
வியாபார நோக்கமாக அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வாகனம் எம்பிலிப்பிட்டிய பகுதியில் தடம்புரண்டதால் இரண்டு பேர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளனர்.
அம்பாறை, தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த நண்பர்கள் ஐவர் வாகனம் ஒன்றில் வியாபார நோக்கமாக கொழும்பு செல்லும் வழயில் எதிரில் வந்த வாகனம் ஒன்றுக்கு இடம் விடுவதற்காக விளகிய போது அருகிலிருந்த மதகில் மோதி தடம் புரண்டது.
இச்சம்பவம் நேற்றுக்காலை 10 மணியளவில் இடம்பெற்றது. அருன ராஜபக்ஷ மற்றும் சமிந்த ஹெரத் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர்.
ரஞ்சித்குமார கபில வசந்த தர்ஷன ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய வகையில் எம்பிலிப்பிட்டிய வைத்திய சாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
10 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago