Kogilavani / 2011 நவம்பர் 23 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் வசதி குறைந்த குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேற்படி இணைப்புகளுக்கான ஆவணங்களை பயனாளிகளிடம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை பிற்பகல் அட்டாளைச்சேனை பிரதேச சபைக் காரியாலயக் கட்டிடத்தில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனைப் பிரதேச தபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல். முனாஸ் மற்றும் ஐ.எல். மனாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, 37 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்புக்குரிய ஆவணங்கள் உரியவர்களிடம் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
48 minute ago
56 minute ago
சிறாஜ் Thursday, 24 November 2011 02:11 AM
அம்பாறைப் பகுதியில் சிறந்த செய்திகள் அதிகமாக வழங்கும் செய்தியாளர் ஹனீக் அஹமட்டுக்கு வாழ்த்துக்களை சொல்லித்தான் ஆகவேண்டும்
அத்துடன் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் சிறந்த சேவையினையும் அன்புடன் பாராட்டுகிறேன். வாழ்க உங்கள் சேவை வளர்க உங்கள் அரசியல் பணி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
56 minute ago