2025 ஜூலை 05, சனிக்கிழமை

கால்பந்தாட்டத்தில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியனாகியது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)


வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளின் 14 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டியில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி வலிகாமம் வலயச் சம்பியனாகியது.

இக்கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்நெல் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. 

இப்போட்டியில் ஏழாலை ஸ்ரீமுருகன் மகா வித்தியாலயத்தை எதிர்த்து இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மோதியது.  முதல் பாதி ஆட்டத்தில் ஹென்றியரசர் கல்லூரி அடுத்தடுத்து 3 கோல்களைப் போட்டு  3 : 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையிலிருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஏழாலை ஸ்ரீமுருகன் அணி மேலும் கோல்கள் போடும் வாய்ப்பை தடுத்தது. இருப்பினும் ஹென்றியரசர் கல்லூரி அணி மேலும் ஒரு கோலைப் போட்டது. இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஏழாலை ஸ்ரீமுருகன்  கோல் எதனையும் போடவில்லை.

இறுதியில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணி 4 : 0 என்ற கோல் கணக்கில் வலிகாமம் வலயச் சம்பியனாகியது.

இதேவேளை, மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் மோதியது. ஆட்டம் முடியும்வரை இரு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை. சமநிலை தவிர்ப்பு உதையில், சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணி 3 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .