George / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையாளத்தில் அறிமுகமான காலகட்டத்தில் மம்முட்டியுடன் தஸ்கரவீரன், ராப்பகல் என இரண்டு திரைப்படங்களில் நடித்த நயன்தரா, மூன்றாவது முறையாக சித்திக் இயக்கத்தில், மெகாஸ்டாருடன் பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்தார். திரைப்படமும் சூப்பர்ஹிட் ஆனது.
இப்போது மீண்டும் மம்முட்டியுடன் புதிய திரைப்படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளார் நயன்தாரா.
இந்தத் திரைப்படத்தை இயக்குபவர் ஏ.கே.சாஜன். இயக்குனர் ஷாஜி கைலாஷின் வலது கரங்களில் இவரும் ஒருவர. இப்போது இவர் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் மம்முட்டி வழக்கறிஞராக நடிக்கிறார். விரைவில் இந்தத் திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .