2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

பஹ்ரைனில் 18 நாட்களாக தவித்த 192 இந்தியர்கள் மீட்பு

Freelancer   / 2026 மார்ச் 20 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்​ரேல், அமெரிக்​கா, ஈரான் இடையே நிலவி வரும், கடுமை​யான போர் சூழல் காரண​மாக, பஹ்ரைனில் 18 நாட்​களுக்கு மேல், தவித்​துக் கொண்​டிருந்த, 192 இந்தியர்கள் மீட்​கப்​பட்​டு, சிறப்பு தனி விமானம் மூலம் நேற்று சென்னைக்கு திரும்பினார்.

இஸ்​ரேல், அமெரிக்​கா, ஈரான் இடையே கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்​கியதையடுத்​து, மத்​திய கிழக்கு நாடு​கள் மற்​றும் ஐக்​கிய அரபு நாடு​கள், வளை​குடா நாடு​களின் வான்​வழிப் பகு​தி​கள் மூடப்​பட்​டன.

இதனால், ஐக்​கிய அரபு நாடு​கள், வளை​குடா நாடுகளில் இருந்து விமான சேவை​கள் இல்​லாத காரணத்​தால், பஹ்ரைன் நாட்​டில் உள்ள தமிழர்​கள் ஏராள​மானவர்​கள், இந்​தியா திரும்ப முடி​யாமல், பஹ்ரைன் நாட்​டில் தவித்​துக் கொண்டு இருந்​தனர்.

அவ்​வாறு தவித்​துக் கொண்டு இருந்​தவர்​களில் முதியோர், நோயாளிகள், குழந்​தைகள், கர்ப்​பிணி பெண்​கள் ஆகியோர்​களுக்கு முன்​னுரிமை அளித்​து, அவர்​களை தனி சிறப்பு விமானம் மூலம், சென்​னைக்கு அனுப்பி வைப்​ப​தற்​கு, பஹ்ரைனில் உள்ள தமிழ் சங்​கத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஏற்​பாடு​களை செய்​தனர்.

ஆனால், பஹ்ரைனிலிருந்து சென்​னைக்கு விமான சேவையை நடத்தி வரும் கல்ஃப் ஏர்​வேஸ் விமான நிறு​வனம், தற்​போதைய சூழ்​நிலை​யில், பஹ்ரைனிலிருந்து விமான சேவை நடத்த முடி​யாது என்று கூறி​விட்​டது.

அதேசமயம், பஹ்ரைன் அருகே உள்ள சவூ தி அரேபியாவின் தமாம் நகரில் இருந்து சிறப்பு விமானத்தை இயக்​கு​வதற்​கு, கல்ஃப் ஏர்​வேஸ் விமான நிறு​வனம் சம்​மதம் தெரி​வித்​தது. இதையடுத்​து, பஹ்ரைன் தமிழ் சங்​கத்தை சேர்ந்​தவர்​கள், அதற்​கான ஏற்​பாடு​களை செய்​தனர்.

192 பேர் பஹ்ரைனிலிருந்து பஸ்களின் மூலம், தமாம் நகருக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். தமாம் நகரில் இருந்து கல்ஃப் ஏர்​வேஸ் சிறப்பு விமானம் மூலம், இந்த 192 பேரும் நேற்​று​ முன்​தினம் நள்​ளிரவு சென்​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இவர்​களில் ஒரு சிலர் விமான டிக்​கெட்​டுக்கு பணம் இல்​லாமல் தவித்​தனர். அவர்​களுக்கு பஹ்ரைன் தமிழ்ச் சங்​கம் மற்​றும் தொண்டு நிறு​வனத்​தினர், உதவி​யுடன் விமான டிக்​கெட்​டு​கள் எடுத்​து, சென்​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்டனர் என  கூறப்​படு​கிறது.

நேற்று காலை அந்த சிறப்பு விமானம், சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வந்து சேர்ந்​தது. அதில் வந்த 192 பேரும் குடி​யுரிமை, சுங்​கத்​துறை மற்​றும் பாது​காப்பு சோதனை​கள் முடித்து வெளி​யேறினர்.

அவர்​களை தமிழ் சங்​கத்தை சேர்ந்​தவர்​கள், சென்னை விமான நிலை​யத்​தில் வரவேற்​று, அவர​வர் சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைத்​தனர்​. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X