2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சாவகச்சேரி மாணவன் கொலை;சந்தேக நபர்கள் சார்பான பிணை மனு நிராகரிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் சாவகச்சேரியில் வர்த்தகர் ஒருவரின் மகன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் சார்பாக  தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதவான் ரி.மே.பிரபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்படி பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருக்கு எதிரான உத்தரவு நடைமுறையில் இருக்கும் என சாவகச்சேரி நீதவான் தெரிவித்தார்.

மேற்படி வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .