Editorial / 2020 ஜனவரி 06 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை - மடுல்சீமை வீதியில் 06ஆம் கட்டை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது, அந்தப் பகுதியில் கடும் மழையுடனான வானிலை காணப்படும் நிலையில், வீதியில் ஏற்பட்ட வழுக்கல் நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
செங்குத்தான பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட இந்த விபத்தினால் குறித்த பஸ் இரண்டாக உடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




28 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago