2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மஸ்கெலியாவில் குப்பை தொட்டியிலிருந்து சிசு மீட்பு

Super User   / 2010 மே 28 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி எஹெலியகொட பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் மலசலகூட குழியொன்றிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று  மீட்கப்பட்டிருந்த நிலையில், மஸ்கெலியாவில்  இன்று குப்பைத் தொட்டியொன்றிலிருந்து மற்றுமொரு சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு, குப்பைத் தொட்டியில் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை பொதுமக்கள் இன்று காலை கண்டுபிடித்திருந்தனர். இதனையடுத்து, தமக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது குறித்த சிசு மஸ்கெலிய வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, இது தொடர்பில் டெயிலிமிரர் இணையளத்திற்கு கருத்துத் தெரிவித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பி.ஜி.பி.கமகே, மேற்படி சிசு இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன்,  சிசு ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும்  தெரிவித்தார்.

இதற்கிடையில், குறித்த சிசுவின் தாயாரைக் கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.



You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 28 May 2010 09:12 PM

    இம்மாதிரி செய்திகள் அடிக்கடி வரத்தொடங்கிவிட்டன. இவர்களது வயதுவிபரங்கள் இவர்கள் ஏன் பருவகால மயக்கங்களில் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை கைவிடுகின்றார்கள். இவர்கள் திடீரென்று பொருளாதாரகஷ்டங்களுக்கு ஆளானவர்களா? அல்லது நிர்வாணபடங்கள் கொண்ட இணையதள/பத்திரிகை விளம்பரங்களுக்கு ஏமாந்தவர்களா? என்று கண்டு பிடித்து மறு வாழ்வு அல்லது தண்டனை என்று மிக கச்சிதமாக செயல்பட வேண்டும், சமூகவியல் அமைச்சு இம்மாதிரியான செய்திகள், அடிப்படையில் ஏதோ ஒரு சமூகக் கோளாறை அல்லது தத்தெடுக்கும் சட்டக்குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .