Princiya Dixci / 2016 ஜூலை 13 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகடிவதையில் ஈடுபட்ட முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவர்கள், வகுப்புகள் மற்றும் விரிவுரைகளில் பங்கு பற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இன்று புதன்கிழமை (13) தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தின் ஒழுக்கக் கோவைகளை மீறி இந்த இரண்டாம் வருட மாணவர்கள், முதலாம் வருட மாணவர்களைப் பகடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிற்கமைய மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைவதற்கு கடந்த ஜுன் மாதம் 25ஆம் திகதி முதல் இவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பகடிவதையில் ஈடுபட்ட 291 மாணவர்களே இவ்வாறு தடை விதிப்பட்டவர்களாவர்.
இரண்டாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கால வரையற்ற தடை நாளை வியாழக்கிழமை (14) முதல் நீக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் காலை 06 மணிக்கு விடுதிகளுக்கு சமுகமளிக்க வேண்டுமெனவும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர்களுக்கான சகல கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சகல மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
8 minute ago
44 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
44 minute ago
53 minute ago
1 hours ago