Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு நபரும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கான வாசற் கதவு எந்நேரமும் திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.
அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக்கொள்வதற்கு மேலும் 5 உறுப்பினர்களே தேவைப்படுகின்றனர். இந்நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தினை மேற்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (SAJ)
Pix: Pradeep Dilrukshana
.jpg)

04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026