Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் உட்பட ஐவர் அடங்கிய குழுவொன்று, ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இன்று இலங்கை வருகிறது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பினையேற்று வருகை தரும் அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், விமானப் படைத் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோரைச் சந்தித்துப் உரையாடவுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் உயிர்நீத்த, இந்திய சமாதானப் படையினருக்காக பத்தரமுல்லை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஞாபகார்த்த தூபிக்குச் சென்று அவர் அஞ்சலி செலுத்துவாரென தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத் தலைமையகத்தில் விஜய குமார் சிங்கிற்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டும். இதனைத் தொடர்ந்து அவர் வவுனியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago