2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இன்று சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினமாகும்’

Editorial   / 2019 ஜூன் 12 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

சமுதாயத்தில் சிறுவர்களின் வருங்காலத்தை கட்டியெழுப்பும் தேவை அனைவருக்கும் உண்டென்ற வகையில், அவர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் அடிப்படை விடயமான கட்டாயக் கல்வியை வழங்குதல் அவசியமானதாகும்.

ஒவ்வொரு குழந்தையும் கட்டாயக் கல்வி பெறும் உரிமையுடையவர்களாக விளங்குகின்றனர். அவர்கள் தங்களது புதிய கனவுகளை அடைய வாய்ப்புகளை வழங்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.

எந்தவொரு சிறுவரையும் தொழிலாளர்களாக யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக, அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது 1929 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறையிட முடியுமென்பதுடன், இம்முறை 9,000 வரையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .