2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது

Editorial   / 2020 மே 21 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறு அறிவித்தல் வரை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது.

தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூதரகம் மூடப்பட்டுள்ள நாட்களில் slemb.abudhabi@mfa.gov.lk மின்னஞ்சலின் ஊடாக அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 800 119 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொண்டு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கை தூதரகம், இந்த விடயங்களை கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .