2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கட்டுநாயக்கவில் சுற்றித்திரிந்த 60 பேர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ. ஏ. காதிர் கான்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 60 பேரை, கட்டுநாயக்க குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்து, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.   

இவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா 1, 500 ரூபாய் வீதம், 90 ஆயிரம் ரூபாயை அபராதமாகத் தொகையாக செலுத்துமாறு, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   

நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் கட்டுநாயக்க வந்து சுற்றித்திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் ஆண்கள் என, நீதிமன்ற பதிவேட்டில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X