ஆர்.மகேஸ்வரி / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கிருலப்பனைப் பிரதேசத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் காரியாலயத்தின் மீது, இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், காரியாலயத்திலிருந்த உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
அந்தத் தாக்குதலில், ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் டைட்டஸ் பெரேராவும் காயமடைந்துள்ளார் எனத் தெரிவித்த, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, தேர்தல் அமைதிக் காலத்திலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அத்துடன், சேதமாக்கப்பட்ட காரியாலயத்தையும் பார்வையிட்டார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago