Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை, இன்று (22) முதல் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ள அந்த திணைக்களம், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
நேற்று (21) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் காலி – தெல்லவ பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி (112.5 மில்லிமீற்றர் ) பதிவாகியுள்ளது.
காலி – ஹியாரே பகுதியில் 102.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் களுத்துறை – மதுகம பகுதியில் 100.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. மாத்தறை, களுபோவிட்டியான பகுதியில் 102.7 மில்லி மீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 55 வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியம் மற்றும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான பகுதிகளில் இந்த அதிரிப்பு காணப்படும்.
அத்துடன், தென் கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் இதனால், குறித்த கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணபடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
1 hours ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025