2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’ரவி விலக வேண்டும்’

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 யொஹான் பெரேரா

இந்த அரசாங்கத்தின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, தனது பதவியிலிருந்து விலக வேண்டுமென, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, நேற்று (08) தெரிவித்தார்.

பேண்தகு அபிவிருத்தி தொடர்பான மேற்பார்வைக் குழுவின் இடைக்காலை அறிக்கை தொடர்பாக, ஊடகங்களுக்குத் தெளிவபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த மேற்பார்வைக் குழுவின் தலைவராக, திலங்க சுமதிபாலவே பணியாற்றுகிறார்.

"அமைச்சர் கருணாநாயக்க தொடர்பான இந்தக் கருத்தை, பிரதி சபாநாயகராக நான் வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக வெளிப்படுத்துகிறேன்" என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X