2026 ஜனவரி 14, புதன்கிழமை

11 பேர் ஐ.தே.கவில் இணைவர்

Editorial   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 11 பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர் என, தகவல் வெளியாகியுள்ளது.  

இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிவிலகிக்கொண்டாலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைக்கும் என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு, இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் ஆளும் தரப்பினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க வேண்டுமென்று, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருதரப்பினர் அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஆட்சிபீடமேறினால் தாமும் ஆதரவை நல்குவோம் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான நிலையிலேயே, மேற்கண்ட தகவல் கசிந்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .