Niroshini / 2016 மார்ச் 11 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
திருகோணமலை, அபயபுர பகுதியில் நேற்று (10) மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, அன்புவெளிபுரம் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் பிரசாத் (வயது 26) பிரசாத் தர்சிகா (வயது 25) பிரசாத் அஸ்வில் (வயது 04) ஆகியோரே விபத்தில் படுகாயமடைந்தவர்கள் என உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பணயித்த மூவரும் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .