Super User / 2011 ஒக்டோபர் 09 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
மூதூர் பிரதேசத்திலிருந்து 6 இயந்திரப் படகுகள் மூலம் மீன் பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள் மூதூர் நீதிமன்றினால் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இந்த மீனவர்கள் சம்பூர் கடல் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் தவறுதலாக பிரவேசித்ததையடுத்து கடற் படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் இந்த மீனவர்கள் தாங்கள் தெரியாத நிலையில் தவறுதலாக உயர் வலய பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்ததால் இவர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
53 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
55 minute ago
1 hours ago