2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஜே.வி.பி. மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். குடாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணித் தலைவர்கள் சிலர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கத்தினால்  கொழும்பு, புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது.

'மக்களே, நாட்டின் ஜனநாயகத்திற்காக ராஜபக்ஷ வெறியை தோற்கடிப்போம்' போன்ற சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஜனநாயகத் தேசிய முன்னணித் தலைவர் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா உட்பட பலர் கலந்துகொண்டனர். Pix by:-Pradeep Paththirana


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .