Gopikrishna Kanagalingam / 2016 ஜூலை 27 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைசிறந்த வீரர்களுக்கான காட்சிப் பட்டியலில் (ICC Cricket Hall of Fame) சேர்க்கப்பட்ட முதலாவது இலங்கை வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
முத்தையா முரளிதரன் தவிர, அவுஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் தலைவி கரென் றொல்ட்டன், டொன் பிரட்மனின் அணியில் இடம்பெற்றிருந்த ஆர்தர் மொரிஸ், இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜோர்ஜ் லோமான் ஆகியோரும், இவ்வாறு இப்பட்டியலில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதோடு, இவ்வாண்டின் இறுதியில், இவர்களது உள்ளடக்கம் உத்தியோகபூர்வமாக மாற்றப்படும்.
கௌரவம் வழங்கப்பட்ட நால்வரையும் பாராட்டிய சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்ஸன், "நவீன யுகத்தின் அதிசிறந்த வீரர்களில் ஒருவராக முரளிதரன் காணப்படுகிறார். அவரது (துடுப்பாட்ட வீரர்களை) ஏமாற்றும் இயல்பும் தொடர்ச்சியாகத் திறமையை வெளிப்படுத்தும் இயல்பும், டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணி, போட்டித்தன்மை மிக்க அணியாக விருத்தியாவதற்கு உதவியது" என, முரளியைப் பற்றித் தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 534 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முரளிதரன், இவ்விரண்டு வகையான போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக உள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசராக, இலங்கைக்கெதிரான தொடரில் முரளி செயற்படுவதன் காரணமாக, அவர் மீதான ஒரு பகுதியினரின் விமர்சனங்களும் அவர் தொடர்பான சர்ச்சைகளும் காணப்படுகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago