Super User / 2011 ஜூன் 19 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இங்கிலாந்து அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நெருக்கடியான நிலையில் உள்ளது.
சௌதம்ப்டன் நகரில் நடைபெறும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 184 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி போட்டியின் நான்காவது நாளான இன்று 8 விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
இயன் பெல் ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களைப் பெற்றார். இது இயன்பெல்லின் 13 ஆவது டெஸ்ட் சதமாகும்.
இலங்கைப் பந்துவீச்சாளர்களில் சுரங்க லக்மால் 99 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெலகெதர 90 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் திசேர பெரேரா 102 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய ஆட்டம் முடிவடைந்த போது 3 விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டடங்களைப் பெற்றிருந்தது.
பரணவிதான 10 ஓட்டங்களையும் திரிமான்ன 38 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 6 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். குமார் சங்கக்கார 44 ஓட்டங்களுடனும் ரங்கன ஹேரத் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
போட்டியின் இறுதிநாளான நாளை திங்கட்கிழமை இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துக்கொள்வதற்கு குறைந்தபட்சம் 82 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.
19 minute ago
24 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
31 minute ago
37 minute ago