Princiya Dixci / 2016 மார்ச் 30 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நபர் ஒருவர், கஞ்சா விற்பனை செய்வதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
களுவன்கேணி அக்கரை எனுமிடத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த 46 வயதான சந்தேகநபரிடமிருந்து 2750 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அந்நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 Jan 2026
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Jan 2026
11 Jan 2026