Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வீடுகள் இல்லாத வறிய மக்களுக்கு, சொந்தக் காணியில் வீடுகள் அமைத்து கொடுப்பதே, ஜனாதிபதியின் திட்டம் என்று, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில், மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பமொன்றுக்கு, வீடு அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வீடு நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிக்கும் முகமாக முதற்கட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த பயனாளியின் வீட்டில் தென்னங்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago