Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மின்சார சபையின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 23ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் 37 இடங்களில் இருவேறு நேரங்களில் மின்தடை செய்யப்படவுள்ளதாக மாவட்ட மின்சார சபை அறிவித்துள்ளது.
காலை 7.30 மணிமுதல் 5 மணிவரையான காலப்பகுதியில் மண்டுர், சங்கர்புரம், கணேசபுரம், வெல்லாவெளி, கோயில் போரதீவு, பெரியபோரதீவு, பழுகாமம், தும்பங்கேணி, திக்கோடை, தாந்தாமலை, அம்பிளாந்துறை, களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு, கழுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிப்பாளையம், குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, அரசடித்தீவு, மகிழடித்தீவு, கொக்கடிச்சோலை, ஆரையம்பதி, பாலமுனை, காத்தான்குடி ஆகிய பிரசேதங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை காலை 9 மணிமுதல் பகல் 12 மணிவரை சின்ன உப்போடை, பெரியஉப்போடை, மாமாங்கம், அமர்தகழி, பாலமீன்மடு, திராய்மடு, நாவலடி, டச்பாபர், கல்லடி வரையான பகுதிகளில் மின்சார தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
2 hours ago
29 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
29 Dec 2025