Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பழைய கல்முனை வீதியிலுள்ள அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டை காலை 7 மணிக்கும் பகல் 1 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடைத்து 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 3 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வீட்டை மூடிவிட்டு அலுவலகத்திற்குச் சென்று விட்டு பகல் 1 மணிக்கு வந்து பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
14 minute ago
24 minute ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
23 Oct 2025