Super User / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரீ.எல்.ஜெளபர்கான்)
விவசாய அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 150 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருஸாங்கன் தெரிவித்தார்.
இப்பதவிக்கான விண்ணப்பம் கோரிய போது மாவட்டம் முழுவதிலுமிருந்து 5800 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான நேர்முக பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி கள்ளியங்காடு கமநல அபிவிருத்தி திணைக்கள தலைமையகத்தில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
விண்ணப்பதார்களுக்கு நேர்முக பரீட்சைககான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
38 minute ago
58 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
58 minute ago
8 hours ago