Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
( எஸ்.சுவர்ணஸ்ரீ )
தோட்டப் பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவதால் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்படுவதாக ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் தெரிவித்தார்.
வட்டவளை பெருந்தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட ஹட்டன் குயில்வத்தைத் தோட்டத்தில் வளர்ந்துள்ள கருப்பன் தேயிலை மரங்கள் வெட்டப்படுவதால் நூற்றுக்கணக்கான தேயிலைச் செடிகள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. இதனால் தோட்டத் தொழிலாளர்களே இறுதியில் பாதிக்கப்படப் போகின்றனர்.இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்ட தோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Apr 2026