2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கற்குழி விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2010 நவம்பர் 02 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எஸ்.எம். நஸீர்)

கொடகவெலை பின்னகெட்டிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கருங்கல் உடைக்கும் பகுதியில் கற்குழியினுள் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக மேற்பார்வையாளர் ஒருவர் ஸ்தலத்தியே பலியானதாக கொடகவெலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கற்குழியினுள் மேற்பார்வையாளர் இறங்கிய வேலை பாரிய வெடிப்பொன்று ஏற்பட்டாதாகவும் கற்களின் தாக்குதலால் அவர் ஸ்தலத்திலேயே பலியானதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலாங்கொடை தெபாலமுள்ளையைச் சேர்ந்த 52 வயதான இரு குழந்தைகளின் தந்தை டி.வி.குணசேன என்பவரே மேற்படி விபத்தில் பலியாகி உள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொடகவெலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .