2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பலசரக்குக் கடை உடைத்து திருட்டு

Niroshini   / 2016 மார்ச் 09 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

துன்னாலை தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலசரக்குக் கடையொன்று, செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடையின் முன்பக்க கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், காசுப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 1 இலட்சத்து 43 ஆயிரத்து 650 ரூபாய் பெறுமதியான பொருட்கள் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கடை உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .