2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வான் விபத்து: நால்வர் காயம்

Menaka Mookandi   / 2016 ஜூலை 25 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் ஸ்டன்லி கல்லூரி வைரவர் ஆலயச் சந்தியில், இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை, வான் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில்,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்றே, தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியோரத்தில் நின்ற தென்னை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .