Super User / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெடுந்தீவு கடற்பரப்பில் தற்சமயம் கடல் உணவுப் பொருள்களின் உற்பத்தி வெகுவாகக் குறைந்து காணப்படுவதாகவும், இதனால் தொழிலுக்காகச் செல்லும் மீனவர்கள் வெறும் கையுடன் திரும்ப வேண்டியுள்ளதாகவும் நெடுந்தீவு மீனவர்கள் கூறுகிறார்கள்.
இதனால் தற்சமயம் நெடுந்தீவில் கடல் உணவுகளுக்குப் பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வட இலங்கைக் கடல் பிராந்தியத்தில் மீன் வளங்கள் அருகிவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், நெடுந்தீவு மீனவர்கள் தாங்கள் தினமும் பெரும் ஏமாற்றத்துடனேயே திரும்புவதாகவும் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படலாம் எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தினமும் பல நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் இந்தப் பிராந்தியத்தில் நுழைந்து சிறிதும் பெரிதுமாக உள்ள கடல் வளங்களை அள்ளிச் சென்றதில் தற்சமயம் இப்பகுதிகளின் மீன் வளம் அருகிவிட்டதாகவும் மீனவர்கள் கூறுகிறார்கள்.
37 minute ago
47 minute ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
23 Oct 2025