Super User / 2011 ஜனவரி 10 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களில் நாளை செய்வாய் கிழமை மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயரழுத்த மின் மார்க்கங்களில் பராமரிப்பு வேலைகள் இடம்பெறவுள்ளதாலேயே இந்த தடை அமுல்செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபையின் சுன்னாக கிளை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளை சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை, உயர் பாதுகாப்பு வலயப்பகுதி ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்த பணிகள் முன்னதாக நிறைவு பெறும் பட்சத்தில் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே மின்சார விநியோகம் வழங்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் சுன்னாக கிளை தெரிவித்தது.
3 minute ago
11 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
3 hours ago