Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை பல இடங்களில் மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் சுண்ணாக அலுவலகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய புன்னாலைக்கட்டுவன், அச்செழு, அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மின்சாரம் தடைப்படும்.
இது தவிர, கொட்டடி, நாவாந்துறை, மீனாட்சிபுரம் ஆகிய இடங்களில், காலை 8.30 முதல், மாலை 5 மணி வரையிலும், மின்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் மார்க்கங்களில், கட்டமைப்பு பணிகளின் பொருட்டே இவ்வாறு மின்சாரம் தடைசெய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் சுண்ணாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
39 minute ago